உபயோகமுள்ள
வீட்டுக்குறிப்புகள்
v
குளிர்சாதனப்பெட்டியைத்
துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள்
உள்ளே நுழையாது.
v
டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட்
இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது.
ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர்
ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே
மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள்
விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
v
மூட்டைப்பூச்சி
தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க
வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.
v
சில வகை
தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை
சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல்
உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
v
கறுத்துப்போன
வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.
v
சர்க்கரை
வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை
மொய்க்காது.
v
மரச்சாமான்களை
பாலீஷ் செய்வதற்கு, முதலில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய
வைத்து பிறகுதான் பாலீஷ் பூச வேண்டும்.
v
தோல் பொருள்களின்
நிறம் மங்காதிருக்க, அவற்றின் மீது லின்ஸிட் ஆயில் எனப்படும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க
வேண்டும்.
v
ஈக்கள் அதிகம்
உள்ள இடத்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள்
பறந்து விடும்.
v
மெழுகுவர்த்தி
அதிக வெளிச்ச்சம் தர, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும்.
உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.
No comments:
Post a Comment