ஒருவர் ஒரு பிச்சைக்காரனுக்கு
ரூ 10 கொடுத்தார். அவர் வெகு காலமாக அவனுக்குப் பிச்சை கொடுப்பார்.
பிச்சைக்காரன் கேட்டான் ஏன் ஐயா முன்பு ரூ 100 பின் ரூ 50 பின் ரூ 25 இப்போது ரூ 10.கொடுக்கிரீகள்
என்றான். அதற்கு பிச்சை போட்டவர் சொன்னார்
பிரமச்சாரியாக இருத்த போது 100 கொடுத்தேன். கல்யாணமான பின் 50 கொடுத்தேன். முதல் குழந்தை
பிறந்த பின் 25 கொடுத்தேன் . இப்போது இரண்டாவது குழந்தை பிறந்த பின் 10 கொடுக்கிறேன்
என்றார்.
அதற்குப் பிச்சைக்காரன்
இது என்ன நியாயம். என் பணத்தை எடுத்து உங்கள் குடும்பத்தை வளர்க்கிரீகள் என்றான்.
இது போலத்தான் நாம்
இயற்கையிடமும், நம் அரசாங்கத்திடமும் நமக்கு உதவிசெய்பவர்களிடமும், அப்பா அம்மா
விடமும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
சொன்னவர் –
அமிர்தானந்தமயி