Saturday, 11 October 2014

gangsta- Ravan

Great modern kids.Worth reading

A mom asked her elder kid to explain diwali to his bro ..
.
He replied:
"So luk, this dude Ram had,
like a big kingdom,
 & people liked him
but like his step mom or sumthin,
was kinda weird and she forced her hubby
to send this Ram to sum jungle or sumthin..
Coz he was goin for 14yrs,
So his wife n bro got along..(U know just 2 chill)
But dude forest was real scary shit..
Was full of devils  n things like dat,
but dis dude killed thm wid arrows..
But den sum bad gangsta- Ravan
picked up his babe sita..
Dis Dude Ram n his bro got real mad...huh....
So they got an army of monkeys..
dont ask how...
Attacked Ravan
got d babe n returned home..
People thought atleast dey deserv sumthn
They had no bars or clubs or smoke stuff to party...
So they lit lamps..
N this is how it all  started .

Mom fainted !!

Friday, 10 October 2014

மக்கள் பிரதிநிதியில் எந்தமாற்றமும் தெரிகிறதா 1000 வருஷமாக

மக்கள் பிரதிநிதியில் எந்தமாற்றமும் தெரிகிறதா 1000 வருஷமாக

http://tamizarvaralaru.blogspot.in/2013/08/blog-post_8.html

குடவோலை முறை உத்திரமேரூர் – கோ ஜெயகுமார்

தேர்தலில் நிற்க

யார் யார் தகுதியற்றவர் என்றும் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்கமுடியாது.
இவர் மட்டுமல்ல இவரது மகன், பெயரன், தந்தைவழி, தாய்வழி, மகளையோ; மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவர் வழியில் எந்தவிதமான சொந்தக்காரர்களும் தேர்தலில் நிற்க முடியாது.
தான் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டு பின் தனது சொந்தக்காரர் யாரையும் ஆட்சியில் அமர்த்திவிட முடியாது. இதைக் கல்வெட்டு வாசகத்திலேயே காண்போம்.
பொதுச் சொத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தன் சொத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும் என்பது கருத்து.
இல்லையெனில் அவனது இருவழிச் சொந்தக்காரர்களும் எப்பொழுதும் தேர்தலில் நிற்க முடியாது எனக் கடுமையான விதி ஏற்படுத்தப்பட்டது.
இது மட்டுமல்ல கள் சாராயம் குடிப்பவன், பிறர் பொருள் அபகரித்தவன், பிறர் மனைவியை அபகரித்தவன், முதலியோர் நிற்க முடியாது.
இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தூய்மையானவர் என்று சாதிப்பவர்களும் நிற்க முடியாது. இவற்றிற்காகத் தண்டனை பெற்று வெளிப்போந்த பின்னரும் நிற்கமுடியாது.
ஊரில் மாய்மாலம் செய்தல், பேசியே ஏமாற்றுபவர்கள் எல்லாம் நிற்க முடியாது. இவர்களைச் சாஹஸம் செய்வோர் என்று கல்வெட்டு கூறுகிறது.
யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தேர்தலில் நிற்கமுடியாது.
சாஹஸியராயிருப்பான் பரதிரவியம் அபஹரித்தான் எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்

இக்காலத்தில் "பேட்டை ரெளடி" என்பதை அக்காலத்தில் "கிராம கண்டகன்" என்று கூறினர். "கண்டகம்" என்றால் முள் என்று பொருள். முள் போல் ஊருக்கு துன்பம் இழைப்பவன் கிராம கண்டகன் மட்டுமல்ல அவனுக்கு பாதுகாப்பு அளிப்பவனும் நிற்க முடியாது என்பது "கிராம கண்டகனாய் பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான்" கல்வெட்டில் உள்ள வாசகம். "ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் நீக்கி" பிற தகுதி உடையோர் பெயரிட்டுத் தேரந்தெடுத்தல் வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

குடவோலை முறை உத்திரமேரூர் – கோ ஜெயகுமார்

பூம்புகார்!!

பூம்புகார்!!

1.10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர்
சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற
தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம்
உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச்
சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.
(400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால்
உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம்
இறுதியாக அழிந்ததை இச்
செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில்
இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம்
பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில்
வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள்
உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள்
அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல்
நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில்
சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான
நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப்
பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக்
கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:-

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர்,
ஏற்கனவே உலகின் பல
பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம்
உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன்
மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான
படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,
ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் -
இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத்
தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள்
எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:-

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக
அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம்
(கோவா) மேற்கொண்ட முதல்கட்ட
ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின்
சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில
தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன.
பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச்
சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள
துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல
கோடிகளைச் செலவிட்டது.

அப்போதெல்லாம்
பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை.
துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள்
கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம்
துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச்
சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள்
தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும்
என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப்
பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள்
தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக,
பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்
காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில்
வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப்
படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில்
வெளியிட இயலாமற் போனதால்.
இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள்
நொந்து போனார்கள்...
நன்றி : தமிழர்கள் பக்கம்

பா விவேக்




10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர்
சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற
தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம்
உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச்
சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.
(400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால்
உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம்
இறுதியாக அழிந்ததை இச்
செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில்
இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம்
பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில்
வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள்
உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள்
அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல்
நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில்
சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான
நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப்
பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:-
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர்,
ஏற்கனவே உலகின் பல
பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம்
உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன்
மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான
படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,
ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் -
இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத்
தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள்
எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:-
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக
அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம்
(கோவா) மேற்கொண்ட முதல்கட்ட
ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின்
சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில
தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன.
பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச்
சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள
துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல
கோடிகளைச் செலவிட்டது.
அப்போதெல்லாம்
பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை.
துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள்
கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம்
துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச்
சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள்
தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும்
என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப்
பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள்
தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக,
பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்
காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில்
வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப்
படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில்
வெளியிட இயலாமற் போனதால்.
இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள்
நொந்து போனார்கள்...
நன்றி : தமிழர்கள் பக்கம்
பா விவேக்