Friday, 5 December 2014

பூமியின் தலைஎழுத்து அவ்விட மக்களை படுத்துகிறது


எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாலஸ்தீனப் பகுதியை ஆக்கிரமித்து இருக்கு. அந்த நாட்டில் முஸ்லிம், கிறிஸ்த்துவர், யூதர், மற்றவர்கள் இருக்கிறார்கள்.  அதுபோல் இஸ்ரேலிலும் எல்லோரும் இருக்கிறார்கள்.

பாலஸ்தினத்தில் முஸ்லிம் அதிகம்.  இஸ்ரேலில் யூதர்கள் அதிகம்.

உலகின் மற்ற பகுதிகள் போல் இங்கே மதவெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. எனவே காலம்பூராவும் அமைதி இல்லை.


உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?)
ஒரு காலத்தில் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு மத மற்றும் தேசிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது பாலஸ்தீனத்தில்தான். ‘’யூதர்களின் புனிதத் தந்தை’ எனப்படும் ஏபிரஹாம் அங்கு வாழ்ந்திருக்கிறார். ரோமானிய அரசர்கள் யூதர்களை அங்கிருந்து ஓட ஒட விரட்டினார்கள்’’ என்கிறது சரித்திரம். எனவே தங்களது ஒருகாலத்திய தாய்நாடான பாலஸ்தீனத்தைக் குறி வைக்கத் தொடங்கினார்கள் செல்வாக்கு மிக்க யூதர்கள்.
ஐரோப்பாவில் உள்ள யூதர் கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே ‘’ஜியோனிசம்’’ என்ற கொள்கை அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். ‘’பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதிதான் எங்கள் தாயகம். அப்படித்தான் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகிறது. எனவே அந்தப் பகுதி யூதர்களின் சொந்த நாடாக வேண்டும்’’ என்று முடிவெடுத்த அவர்கள் சாரிசாரியாக பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினார்கள்.
வல்லரசு நாடுகள் யூதர்களின் தனிநாடு ஏக்கத்தைப் போக்க முன்வந்தன. 1947ல் ஐ.நா. ஒரு திட்டத்தை அறிவித்தது ‘’பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட வேண்டும். ஒரு பகுதி அரபு மக்களுக்கு. மற்றொன்று யூத இனத்தவருக்கு’’.
அதற்கு அடுத்த வருடமே, மேற்கத்திய நாடுகளின் பெரும் ஆதரவோடு, யூதர்களுக்காக ஒரு தனிநாடு உருவானது - அதுதான் இஸ்ரேல்!
முதலாம் உலகப் போருக்குப் பிறகு ‘லீக் ஆஃப் நேஷன்ஸின்’ (அந்த நாளைய ஐ.நா. சபை) ஆணைப்படி 1922லிருந்து பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு அளிக்கப்பட்டது. (இதனால் அந்தப் பகுதி ‘பிரிட்டிஷ் பாலஸ்தீனம்’ என்றும் அழைக்கப்பட்டது). தனது இந்த ஆணையை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் தான் ஐ.நா. அந்தப் பகுதியை இரண்டாகப் பிரித்தது.
அப்படிப் பிரித்தபோதே அங்கு சிக்கல்கள் முளைக்க வாய்ப்பு உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே துல்லியமாகத் தெரிந்திருந்தது. அதனாலதான் ஜெருசலேம்-பெத்லகேம் அடங்கிய பகுதியைப் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று அறிவித்து , அந்தச் சிறிய பகுதி மட்டும் தன்னால் நிர்வகிக்கப்படும் என்றும் ஐ.நா. தெரிவித்தது.
வெளியே இஸ்ரேலின் பகுதி, அதற்குள்ளே பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி, அதற்கும் உள்ளாக ஜெருசலேம் என்று அமைந்திருந்தது. 1948 ஆகஸ்ட்டுக்குள் பிரிட்டன் தன் ராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்தை வாபஸ் பெறவேண்டும். அதே ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் புதிய நாடுகள் உருவாக வேண்டும். இதுதான் ஐ.நா.வின் நிபந்தனை.
வரலாறு, அரசியல் என்பதோடு நிறுத்திக் கொள்ள முடியாமால் மதம் என்ற மிக முக்கியமான கோணம் இந்த நாடுகளின் பகைமைக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் வெளியாகும்போதெல்லாம் அதை அரசியல் பகைமை போலவே நாளேடுகள் வெளியிட்டாலும், நீறுபூத்த நெருப்பு போல இதன் அடித்தளமாக இருப்பது மதம்.
ஏபிரகாமை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளில் வளர்ந்த மதங்கள்தான் யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே. ஆனால் காலப் போக்கில் இவை ஒன்றுக்கொன்று கடுமையான எதிரிகள் ஆயின. இப்போது இஸ்ரேலின் வசம் உள்ள ஜெருசலேம் இந்தப் பகைமைக்கு மையப் புள்ளியாகிவிட்டது. மூன்று மதங்களின் முக்கிய சங்கமங்கள் நடைபெறும் நகரம் ஜெருசலேம்.
ஜெருசலேம் - இது பாலஸ்தீனத்தின் தலைநகர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் தயாரில்லை. ஜெருசலேம் என்பதை ‘எதிரணியினரின்’ தலைநகராக ஏற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல, பாலஸ்தீனத்தை ஓர் அதிகாரபூர்வமான நாடாக ஏற்றுக் கொள்ளவே இஸ்ரேல் தயாரில்லை!
யூதர்களுக்கு மிக முக்கியமான புனிதத்தலம் ஜெருசலேம். வெளிநாடுகளில் இருக்கும் யூதர்கள்கூட பிரார்த்தனை செய்யும்போது இந்த நகரம் இருக்கும் திசையை நோக்கிதான் வணங்குவார்கள். கி.மு. பத்தாம் நூற்றாண்டிலிருந்தே இந்த நகரில் யூதர்கள் அதிக அளவில் வசித்தனர். இந்த நகரில் உள்ள ஆலயம் (டெம்பிள் மவுண்ட்) யூதர்களுக்கு மிக முக்கியமானது. தங்கள் விவசாய விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை இந்த ஆலயத்துக்குக் கொண்டு வந்து (சமைத்தோ அப்படியேவோ) உண்ண வேண்டும் என்கிறது யூதர்களின் புனித நூல். அதிக அளவு என்றால் பிறருடன் பங்கிட்டுக் கொள்ளலாம்.
மன்னன் சாலமனால் கி.மு. 957ல் எழுப்பப்பட்டது இந்த ஆலயம். யூதர்கள் பலி செலுத்தும் இடம் என்றால் அதிகாரபூர்வமாக இது ஒன்றுதான். சரித்திரத்தில் இந்த ஆலயம் முழுவதுமாக இடிக்கப்படுவதும், பிரமாதமாக மீண்டும் எழுப்பப்படுவதும், மீண்டும் இடிக்கப்படுவதும், உருவாக்கப்படுவதும் என்று பலமுறை நடந்திருக்கிறது. என்றாலும் புனிதத் தலம், புனித ஆலயம் என்கிற ஆழமான நம்பிக்கை யூதர்களுக்கு வேரோடு இருப்பதால் ஜெருசலேம் நகரை அவர்களால் வேறுபடுத்திப் பார்க்கவே முடியவில்லை.
அதே சமயம் கிறிஸ்தவ மதமும் ஜெருசலேம் நகரோடு நீரும் செம்புலச் சேறும்போல கலந்துள்ளது. குழந்தையாக இருக்கும் போதே ஏசுநாதர் அழைத்துவரப்பட்ட இடம் இது. ஜெருசலேம் நகரில் நடைபெற்ற திருவிழாக்களை ஏசுநாதர் கண்டதாகக் கூறுகிறது பைபிள். இங்குள்ள புனித ஆலயத்தை (யூதர்கள் கொண்டாடும் அதே ஆலயம் தான்!) ஏசுநாதர் சுத்தம் செய்திருக்கிறார்.
ஏசுநாதரின் இறுதி உணவு மிகப் பிரபலமானது. அது நடைபெற்றது இந்த நகரில்தான். ஏசுநாதர் மீதான வழக்கு நடைபெற்றதும் இங்குதான். அவர் சிலுவையில் அறையப்பட்டது ஜெருசலேம் நகருக்கு மிக அருகிலுள்ள ஒரு பகுதியில். அவர் புதைக்கப்பட்ட இடமும், உயிரோடு மீண்டு வந்த இடமும்கூட ஜெருசலேம்தான்.
ஜெருசலேம் நகரிலுள்ள ஒரு பாறையின் மீது நின்றபடிதான் முகம்மது நபிகள் சொர்க்கத்துக்குச் சென்றாராம். குரானில் ஜெருசலேம் நகர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரும் விளக்கங்கள் ஜெருசலேம் நகரைக் குறிப்பிடுவதாகவே உள்ளனவாம். ‘’மிகத் தொலைவிலுள்ள மசூதி என்று குரானில் குறிக்கப்படுவது ஜெருசலேம் நகரிலுள்ள மசூதிதான். அங்கு தான் இஸ்லாமின் பிற தூதர்களை அவர் சந்தித்தார். ஏபிரஹாம், டேவிட், சாலமன் போன்று ஜெருசலேம் நகரோடு தொடர்பு கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கும் முக்கியமானவர்கள்தான்.
முஸ்லிம்களுக்கான முதல் வழிபாட்டு திசையாக விளங்கியது ஜெருசலேம் தான். மெக்காவில் இருக்கும்போது முஸ்லிம்கள் ஜெருசலேம் உள்ள திசையை நோக்கிதான் வணங்குவார்கள். தொடக்கத்தில் மெதினாவிலுள்ள மசூதிகள்கூட ஜெருசலேம் உள்ள திசையை நோக்கியே கட்டப்பட்டன. (பின்னர் இவை மெக்காவை நோக்கி கட்டப்பட்டன). நபிகள் நாயகத்துக்குப் பிறகு அவரு டைய பல தோழர்களும், சீடர் களும் ஜெருசலேம் நகரில் வாழ்ந்து மறைந்தனர். அவர்கள் புதைக்கப்பட்டது இந்த நகரில்தான்.
ஆக வெறும் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பு கூட இல்லாத ஜெருசலேம் நகரில் யூத ஆலயம், மசூதி, மாதாகோவில் என்று பெரும் சரித்திரச் சிறப்பு பெற்ற பல மதச் சின்னங்கள் அமைந்துவிட்டன. பிரச்னைகள் கிளம்பாமல் இருந்தால்தானே அதிசயம்?
இப்போது அந்தப் பிரபல ஆலயத்தில் வழிபாடு செய்பவர்கள் யார்? ஒரு காலத்தில் பிரம்மாண்ட யூத ஆலயமாக இருந்து பின்னர் தரைமட்டமான அதன் கீழ்த் தளத்தில் யூதர்கள் இப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள். அங்கு இதற்காக ஒரு பெரிய அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் தளத்தில் இருக்கிறது ஹரம் அல் ஷாரிஃப் (இதற்குப் பொருள் ‘புனிதமான சரணாலயம்’). மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அடுத்ததாக இஸ்லாமிய மார்க்கத்தினரின் மூன்றாவது புனிதத் தலம் இதுதான். அதாவது இங்குள்ள தங்கத்தால் மூடப்பட்ட மேற்கூரை.
யூதர்கள் கட்டடத்தின் மேல் பகுதிக்குச் சென்று தங்கள் பிரார்த்தனைகளை நடத்த வேண்டுமென்று கோரி வருகிறார்கள். பழைய ஆலயத்தில் அப்படித்தானே அவர்கள் வழிபாடு இருந்தது! ஆனால் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள்.
ஐ.நா.வின் கெடு முடிவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தன்னை தனிச்சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. அரபு நாடுகள் போர்க் கொடி உயர்த்தின. எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாலஸ்தீனப் பகுதிக்குள் நுழைந்தன. அங்கிருந்தபடியே யூதர்கள் குடியிருப்புகளின்மீது தாக்குதல்களைத் தொடங்கின.

அளவில் சின்ன நாடு. அதுவும் அப்போதுதான் உருவான நாடு. அப்படியிருந்தும் இஸ்ரேலினால் எப்படி பல்வேறு திசைகளிலிருந்து தாக்குதல் நடத்திய அரபு நாடுகளை சமாளிக்க முடிந்தது? இரண்டு காரணங்கள். ஒன்று, அமெரிக்காவிடமிருந்து வந்து சேர்ந்த நவீன போர்க்கருவிகள். இரண்டு

No comments:

Post a Comment