Tuesday, 16 December 2014

நெட்டில் படித்தது ஆண் பெயரில் பெண் எழுதியது என்று நினைக்கிறன்.

# சந்தோஷமான தருணங்களை (தயவு செய்து படியுங்கள்)

# பன்னிரண்டு மணிக்கு கதவு திறந்தால், முகத்தில் கேக் பூசிக் கத்துகிறார்கள் நண்பர்கள்.

#
அம்மா அப்பாவுக்கு எண்பதாம் கல்யாணம் நடக்கிறது. 
# பெண்ணுக்கும் பையனைப் பிடித்திருக்கிறது.

' ‪#தாயும் 
சேயும் நலம்' என்று டாக்டர் சொல்கிறார்.

#
பலவருஷமாக தேடிக் கொண்டிருந்த பள்ளிக்கூட நண்பன் பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் அனுப்புகிறான்.

#
முகம் பார்க்கிறக் கண்ணாடியில் ரோஜாப் பூவை ஒட்டி வைத்து விட்டுச்
சென்றிருக்கிறான், மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் போது வெளியூர் புறப்பட்டுப் போன கணவன்.

#
அடர்ச்சிவப்பு நிறக் காட்டுப்பூ ஒன்று மலர்கிறது.

#
கிரீட்டிங் கார்டைத் திறந்தால் பாட்டுக் கேட்கிறது.

#பிரமாதமான ஒருக் கவிதையைப் படித்தவுடன் ஒருக் கண்ணீர்த்துளி எட்டிப்
பார்க்கிறது.

‪#ஒரு 
மயில் தோகை விரிக்கிறது.

#
கையில் மருதாணி வைத்திருக்கிற விடிந்தால் மணம் ஆகப் போகிறப்
பெண்ணுக்கு ஊட்டி விடுகிறார் அப்பா.

‪#முதல் 
போட்டு சொந்தமாகப் புதுத் தொழில் தொடங்குகிறான் ஒருத்தன்.

#
ஒருக் குழந்தைத் தூக்கத்தில் சிரிக்கிறது.

#
வானம் சட்டென்று மூடுகிறது.

#
எல்லா தேவதைகளும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள்.


#
இவ்வுலகில் இருக்கும் சந்தோஷமானதருணங்களை அனைத்தும் கண்
முன்னே வந்து செல்கிறது......

No comments:

Post a Comment