Thursday, 11 July 2013

வடை போச்சே

புதுடில்லி :கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நீதிபதிகள், ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,க்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, 8 (4), அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே, இந்த சட்டப் பிரிவு செல்லாது.
கிரிமினல் வழக்குகளில், எந்த மக்கள் பிரதிநிதிக்காவது தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே, அவரின், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவிகள் பறிக்கப்படும். ஆனாலும், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ளவர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.இந்த விவகாரத்தில், சாதாரண மக்களுக்கு ஒரு நீதியும், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நீதியும் பின்பற்றப்படுவது சரியல்ல.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றாலும், 

அதை எதிர்த்து, மேல் முறையீடு செய்து, தொடர்ந்து பதவி சுகத்தை அனுபவிக்க முடியாத நிலை, மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவு, இனிமேல் சிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் பொருந்தும் என்பதால், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு, இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இனிமேல், எந்த வழக்கிலாவது, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிகள் பறிபோவது, உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment