நமக்கு ஒரு நாள் என்பது ,பகல் 12 மணிநேரம் , இரவு 12 மணி நேரம் சேர்ந்த 24 மணி நேரம் 1 நாள் . நம் பித்ருக்களுக்கு ( மறைந்த நம் முன்னோர்களுக்கு) ஒரு நாள் என்பது , ஒரு மாதத்தில் வரும் சுக்ல பட்சம் 15நாள்= பகல் பொழுதாகவும் , கிருஷ்ணபட்சம் 15நாள்= இரவு பொழுதாகவும் ஆக 2 பட்சங்களும் சேர்ந்த 1 மாதம் நம் மறைந்த முன்னோர்களுக்கு ஒரு நாள் . இப்ப கவனியுங்கள் நாம் மாதத்தில் வரும் அமாவாசை தோறும் நம் முன்னோர்களுக்கு தர்பணம் பன்னுவது அவர்களுக்கு நாம் தினசரி உணவு அளிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும் . நாம் வணங்கும் தேவர்களுக்கு ஒரு நாள் என்பது , ஒரு வருடத்தில் வரும் உத்ராயண காலம் 6 மாதம்= பகல் பொழுதாகவும் , தெட்சாயண காலம் 6 மாதம்= இரவுப்பொழுதாகவும் , ஆக 2 அயணங்கள் இணைந்த 1 வருடம் நாம் வணங்கும் தேவர்களுக்கு 1 நாள், சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் காலமே மாதக்கணக்காக எடுத்துக்கொள்ளப்படும் . அந்த வகையில் இன்று மகர ராசியில் சஞ்சாரம் செய்கிறார் , இந்நாளே மகர சங்கராந்தி எனும் தை திருநாள் ஆகும். அதாவது இரவு முடிந்து பகல் ஆரம்பிக்கின்ற நாள் இந்நாள் , அனைவருக்கும் தை பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பர்களே...
No comments:
Post a Comment