Tuesday, 15 July 2014

மனம் உருகிறது

மனம் உருகிறது

ஒருமுறை காமராஜர் குற்றாலத்திற்கு குளிக்க வந்திருந்தார்...
ஏற்கனவே குளித்துக்கொண்டிருந்தவர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.. 
வெளிய ஒதுங்கி நின்ற மக்கள் முனுமுனுப்புடன் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு படிக்கட்டில் நடந்து வரும் காமரஜரையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருவிக்கருகில் வந்த காமராஜர் ஒதுங்கியிருந்த மக்களை பார்த்ததும்..
அங்கிருந்த காவலரை பார்த்து
"இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியான்னே!
இவங்களோட நா சேந்து குளிச்சா ஒனக்கென்னயா???
ஒதுங்கி நின்ற மக்களை பார்த்த காமராஜர்
"இப்படி ஓதுங்கி நின்னா எப்படின்னேன்?, வாங்க எல்லாரும் சேந்து குளிப்போம்"., எனக் கூறிவிட்டு சென்றதும்...
ஏழை பங்காளனை நேரில் பார்த்த களிப்பில், மக்கள் ஆனந்த ஆர்ப்பரிப்புடன் குளியல் போட தொடங்கினர்...
அன்று குற்றாலமே குதூகளித்ததை யாராலும் மறந்திருக்க முடியாது நண்பர்களே!!!



தற்போது தேர்தலில் ஒட்டு போடும் நமக்கு அந்த அருகதை இல்லை

காமராசர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.
தன்னுடைய உதவியாளர் வைரவனிடம், ""இந்த வீட்ல நாம ரெண்டு பேருதான். அரிசி பருப்பெல்லாம் பக்கத்தில இருக்கிற ரேஷன் கடையில வாங்கிக்கோ. ஜனங்க என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் நம்ம சாப்பாடு!'' என்றார்.
""
ரேஷன்ல வாங்குற அரிசி ஒரு மாதிரி வாடை வீசுதுய்யா... வேற மாத்திடலாமா? நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார் வைரவன்.
இதைக் கேட்ட காமராசருக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
""
முதலமைச்சர்தாம்லே இந்த அரிசியைச் சாப்பிடணும்! இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ, அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார்.



MBBS
காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம்,
"உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன'' என்று அதிகாரிகள் கூறினர்.
உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று 20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.
எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரிடமே அதைக் கேட்டார்கள்.
அதற்கு காமராசர்,
"நான் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.
அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்

ஏழை பங்காளன்

அப்போது காமராஜர் முதல்வராக இருந்த சமயம்...
ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார்.
அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டார்.
அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார்.
திருமண நாள் வந்தது. காமராஜரின் கார் அந்தத் தியாகியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்த காமராஜரைப் பார்த்ததும் தியாகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
காமராஜர் அவரிடம், ""நீ அழைப்பிதழ் கொடுத்தபோது உன் வீட்டுத் திருமணத்துக்கு வர முடிவு செய்துவிட்டேன். ஆனால் இதை நான் அப்பவே சொல்லியிருந்தால், முதலமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட கடன் வாங்கித் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியிருப்பாய். உன்னை கடன்காரனாக ஆக்க நான் விரும்பவில்லை'' என்று கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

 No kalyanam
"பொழுது விடிந்தால் போராட்டம்" என்று தனது இளமை காலத்தை பொறுப்பின்றி கழிக்கிறான் காமராசு, என்று உறவினர்கள் குமுறினார்கள். "போலீசில் சிக்கினால் சிறையில் தள்ளி தன் மகனை சீரழித்து விடுவார்கள்" என சிவகாமி அம்மையார் சித்தம் கலங்கினார் .
இதற்கேல்ல்லாம் ஒரே வழி காமராசுக்கு கால்கட்டு போட்டுவிடவேண்டியதுதான் என்று அன்னைக்கு ஆலோசனை கூறினார்கள் உறவினர்கள்.
காமராஜர் வெளியூரில் ஒரு போராடத்திற்கு சென்றிருந்த சமயம் திருமண ஏற்பாட்டை துரிதகதியில் தொடங்கினர்.காமராஜருக்கு ஏற்ற பெண்ணை தேடி முடிவு செய்தாகிவிட்டது. தேதிகூட குறித்தாகிவிட்டது. மாப்பிளை வந்தால் மாலை மாற்றிக்கொள வேண்டியதுதான் .
வெளியூரில் இருந்து திரும்பியவுடன் காமராஜர் வீட்டில் நடக்கும் வேடிக்கையை கண்டார். ஒரு நொடியில் தன் மனதை கல்லாக்கிக்கொண்டார். தனது சுதந்திர போராட்ட உணர்வுகளுக்கு திருமணம் ஒரு தடையே என முழுவதுமாக நம்பினார் . எனவே காமராஜர் "எனக்கு திருமணம் தேவை இல்லை, திருமணதிற்கு வற்புறுத்தினால் என்னை மறந்துவிடுங்கள்" என்று தீர்மானமாக தெரிவித்தார்.
கண்ணெதிரில் மகன் நடமாடினால் போதும் என்று தேற்றிக்கொண்ட அன்னை, கண்ணீர் கசிந்த கண்களுடன் மருமகளுக்காக ஏங்கும் ஆசையை மனதிலிருந்து அகற்றினார்.
ஆம் தன் மகனை தேசத்திற்காக அற்பணித்தார் அந்த தியாகத்தாய்.........


டாக்டர் பட்டம் வேண்டாம் 
''''''''''''’''’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரை தேடி வந்தனர் ..

அவர்களிடம் பெருந்தலைவர் டாக்டர் பட்டமா..? எனக்கா?நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம். நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களை கண்டு பிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். போய் வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்..,.

மக்களோடு மக்களாய் வாழ்ந்த காமராஜர்
காமராஜர் ஒரு சமயம் வெளியூர் சுற்றுப்பயணம்
முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில்
நீண்ட நேரமாகத் தமது கார் நிற்பதும், ஏராளமான

தற்காலத்தில் நடந்து இருந்தால் POLICE COMMISSIONER  வேலை போயிருக்கும்


வாகனங்களின் ஹாரன்கள் ஒலிப்பதும் அவரது
கவனத்துக்கு வந்தது.காரிலிருந்து வெளியே வந்து சுற்றிலும் பார்த்தார்.சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில்
ஏராளமான கார்களும் வண்டிகளும் நின்று
டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது.
சற்றே நடந்து பார்த்தார் காமராஜர். பாலத்தின்
நடுவே ஒரு லாரி பிரேக் டவுன் ஆகி நின்றிருப்பதும்
ஒரே ஒரு டிராஃபிக் போலீஸ்காரர் போக்குவரத்தைச்
சரிபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
உடனே காமராஜர் அவரருகே சென்று அவருக்கு
உதவி செய்து போக்குவரத்தைச் சரிப்படுத்திவிட்டுத்
தனது காருக்குத் திரும்பி வந்து தனது பயணத்தைத்தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல் சைதாப்பேட்டை காவல்
நிலையத்துக்குச் சென்று இதுபோன்ற இடங்களில்
இன்னொருவரைக் கூடுதலாக நியமித்துப் போக்கு
வரத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று கட்டைளை
இட்டு விட்டுத் தமது அலுவலகம் திரும்பினார்.

No comments:

Post a Comment