Tuesday, 7 January 2014

முழுவதும் படிக்க நேரமில்லாதவர்கள் கலர் மட்டும் பார்க்க sorry படிக்க

v  மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்..ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம்
இருக்கிறான்.!
v  பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான், பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்..
v  எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்.நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு  இல்லாமலே போகிறது!
v  சாகாமல் இருக்க வாழ்கிறான், ஆனால் வாழாமலே சாகிறான்!

v  யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே,
v  நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்லஅதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில் தான் அந்த மதிப்பிருக்கு..
v  ஒண்ணைவிடஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
v  எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே, உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன் தான் பணக்காரன்!
v  நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த  சில நொடிகள் போதும்ஆனால்  அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும். நம்மை நேசிக்கும்  பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பது தான் நிஜம்
v  பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு, சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது..
v  இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்..
v  ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும், எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
v  அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்..

v  நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம், நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால்உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!

1 comment: